சொன்னால் கேளுங்கள்

இப்போதெல்லாம்
வாய் விட்டு சிரித்து விடுகிறேன்
எதிரில் யாரும் இல்லையென்றாலும்

நள்ளிரவின் தனிமையில் கூட
முத்தம் கொடுக்கிறேன்
தலையணைக்காவது

முத்தச் சத்தம்
மயக்கத்தான் செய்கிறது

எவரின் அணைப்பிலோ இருப்பதாக
எவராலோ காதலிக்கப்படுவதாக

எல்லாம் சரியாக இருப்பதாக