குறுக்குப் பாதை

நெகிழ்த்தியது
கரைத்தது
அலைக்கழித்தது

அதன் மேல்
ஏறி
அமர்ந்தேன்

அதே நொடியில்
நேரே
உன்னை
அடைந்து விட்டேன்

ஆம்
குறுக்குப் பாதையே
தான்