ஆடியின் நாக்கு

திமிறிப்  பரந்தாள்
கட்டற்ற காற்றாய்

நான்கு சட்டகங்கள்
ஓர் ஆடி

முன் நிற்கிறாள்

உற்று நோக்க

தெரிகிறது
ஆடியை வேண்டும்
அவள் கண்களில்

ஒரு
பிச்சைக்காரக் களை