சங்கீதம்

குழலூதிக் கொண்டிருந்தாய்

கண்கள் கிறங்க

சொக்கிப் போயிருந்தேன்

சின்னக் குரலில்

மெல்லப் பேசினேன்

இடியெனத் தாக்கி

என் குரல்வளையை நெறித்தாய்

இப்போது பேச்சென்ன

மூச்சு கூட இல்லை

கணமும் தயங்காதே

நெறித்த கையினால்

குழலெடுத்து வாசி

சங்கீதம் மிகவும் முக்கியம்.

Leave a comment