குறுக்குப் பாதை

நெகிழ்த்தியது
கரைத்தது
அலைக்கழித்தது

இதன் மேல்
ஏறி 
அமர்ந்தேன்

அதே நொடியில்
நேரே
உன்னை
அடைந்து விட்டேன்

ஆம்
இந்நாள்
வரை
அறியாத
ஒரு குறுக்குப் பாதையை
இக்கணம்
நான்
கண்டு கொண்டேன்