யாருமற்ற பாழ்வெளி

மெல்லென்றொரு அருவியும்

வண்ணச் சிதறலாய் பொழுதுகளும்

வானவில்லும்

ஊடுறுவும் மென்சாரலும்

இடியும்
மின்னலும்

எல்லாமும்
நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன

யாருமே அற்ற
பாழ்வெளியில்