அன்னை

மெத்தென்ற அவள் மடியில்
தலை வைக்கிறேன்

மெல்ல மெல்ல
அவள் மென்மையில் புதைகிறேன்

அவளின் 
நீண்ட
கருத்த கைகள்
என் தலை கோதுகின்றன

ஆழ்ந்த மௌனம்
தாலாட்டுகிறது

கனத்த என் தலை எடையிழக்கிறது

ஆழ ஆழ
மேலே மேலே

கண் செருக
பரம சுகமாய்

அவளில் 
நான்
கரைகிறேன்