கரை

எத்தனை  
முறை
வந்தறைந்தாலும்
கரையைத் 
தாண்டுவதேயில்லை  அல்லவா
என்றான்  அவன்

தாண்டவில்லையெனினும்
தளும்புதல்
ஓய்வதேயில்லையல்லவா
என்றாள்  அவள்

அந்தியைப்  பார்த்தபடி
கைகோர்த்து
சிலைத்திருந்தனர்
இருவரும்