வர்ணமற்றது

நீ
எனக்கென ஏதும்
செய்யாத போது

எனக்கு
உன்மேல்
சுரக்கும்
அன்பை
நான்
மிக மிக நேசிக்கிறேன்

ஏனெனில்

அது
வர்ணமற்றது

மிக மிகத் தூயது

நீ
எனக்குச்
செய்திருப்பதிலேயே
பேருதவி இது