விடை

அறுந்த  பின்
மிச்சம்  மட்டும்
உயரத்தில்
தொங்கிய  படி
ஊசலாடுகிறது

இன்னும்
எதுவுமே
முடியவில்லை

எல்லாவற்றையும்
முடித்த  பின்

எதுவும்  எஞ்சாதபோது

நேர்த்தியாய்
சொல்லிவிட்டுச்  செல்ல  

இது
விடை  பெறுதலா  என்ன