இளையவள்

மணல் வறுக்கும்
வாணலியாய்
துளி ஈரமும்
அற்ற
வெயில்

இலைகள்
சுருண்டு
சாய்ந்து நிற்கிறது
செம்பருத்தி

காலை முதல்
இரவு வரை
ஏதோ ஒன்றுக்காக
பிடுங்கித் தின்னப்படும்
இளையவளைப் போல