சிறுகச் சிறுக..

அனைத்தின்
மீதும்
நீண்டு கிடந்தது
என்
நிழல்

அணைய அணைய
நானே
நிழலென்றாகிறேன்

எப்படியும்
முகம் திருப்பி
துலங்கக்
கண்டு விடுவேன்

அதற்கென்றே
சிறுகச் சிறுக
இரவை உண்கிறேன்