தோன்றியது

நுனி விட்டு
இறங்கியதும்
இனி..

தன் வழி தேர்ந்து
குறுக்கும்
நெடுக்குமாய்
விழுந்தெழுந்து
மெலிந்து 
காய்ந்து
வற்றி

பின் எப்பொழுதோ

ஒரு துளியென
ஊற்றெடுத்து

சில துளிகளென
பெருகி

சென்று சேர்ந்தே தான் விடுகிறது
எங்கோ

தோன்றி..