
கரும் பலகையில் வெள்ளித் தீற்றலாய் அலைகளுக்கொளியூட்டி நீண்டு என் திரை வழி எட்டிப் பார்த்தாள் நான் விழித்திருக்க திகைத்து விட்டாள் 'மனிதக் கண்களுக்கானதன்று..' நாணிக் கண் புதைத்து மெல்லப் புன்னகைத்தாள் பித்து மாயை போதையூட்டி பின் எப்போதைக்குமாக கடந்து சென்றாள்