தன்னையே..

கத்தியும் வாளும் 
சூலமும் ஏந்தி

குருதிக்காய்
நா தவிக்க

இரத்தச் சிவப்பு கண்களை
உருட்டி

பேரோசை எழுப்பிய படி

அதிர அதிர

இங்குமங்குமாய்
அலைகிறாள்

அன்னை

தன்னிலிருந்து
பிரிந்து

தன்னை
தானே
தந்தவனுள்
நிறைந்த

தன்னையே
சுவைக்க