காடானது

உள்ளார்ந்த நதி
தன்னை
வெளிக்காட்டுகிறது
காடாய்
பசுமையாய்
வளமாய்

கனிவாய்
தாய்மையாய்
காதலாய்

எங்கெங்கிலும்
பரவியிருக்கும்
நீர்மையாய்

அனைத்திற்கும்
ஆதாரமான
உயிர் ஊற்றாய்

தெய்வமாய்