
தரையெங்கும் கொட்டிக் கிடந்தன மரமல்லிப் பூக்கள் நட்சத்திரங்களாய் கை மறையும் அந்தி மினுங்கியது அவள் கண் நீலம் மிச்சமிருந்த செம்மையையும் பூசியிருந்த நீலவானம் காத்திருந்தாள் ராதையாய் கண்ணனோடு படகிலாட 'ராதே..ராதே..' உன்மத்தம் கொண்டு இப்போதும் சுழன்றாடுவரோ