தீர்த்தக் கரையினிலே..

If the video doesn’t play click on the title of the video
இயற்றியவர்:  பாரதியார்
இசை: கிரீஷ் கோபாலகிருஷ்ணன்
இணை இசை: லால்குடி கிருஷ்ணன்
பாடியவர்: பாலக்காடு ஸ்ரீராம்
ராகம்: கல்யாண வசந்தம்
தீர்த்தக் கரையினிலே -- தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே, 
பார்த்திருந்தால் வருவேன் -- வெண்ணிலாவிலே 
பாங்கியோ டென்று சொன்னாய். 
வார்த்தை தவறிவிட்டாய் -- அடி கண்ணம்மா! 
மார்பு துடிக்குதடீ! 
பார்த்த விடத்திலெல்லாம் -- உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ! 

மேனி கொதிக்குதடீ -- தலை சுற்றியே 
வேதனை செய்குதடீ!
வானி லிடத்தையெல்லாம் -- இந்த வெண்ணிலா
வந்து தழுவுதுபார்.
மோனித் திருக்குதடீ -- இந்த வையகம் 
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் -- பிரிவென்பதோர் 
நரகத் துழலுவதோ? 

கடுமை யுடையதடீ -- எந்த நேரமும் 
காவலுன் மாளிகையில்; 
அடிமை புகுந்தபின்னும் -- எண்ணும்போது நான் 
அங்கு வருவதற்கில்லை; 
கொடுமை பொறுக்கவில்லை -- கட்டுங் காவலும் 
கூடிக் கிடக்குதிங்கே; 
நடுமை யரசியவள் -- எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள்.

கூடிப் பிரியாமலே -- ஓரிரவெலாம்
கொஞ்சிக் குலவியங்கே 
ஆடி விளையாடியே- உன்றன் மேனியை 
ஆயிரங் கோடிமுறை
நாடித் தழுவிமனக் -- குறைதீர்ந்து நான் 
நல்ல களியெய்தியே 
பாடிப் பரவசமாய் -- நிற்கவே தவம்
பண்ணிய தில்லையடி’
If the video doesn’t play click on the title of the video

எம்.எஸ்.வியின் இசையமைப்பில் எஸ்.பி.பி யின் குரலில் வந்த இந்த ‘தீர்த்தக் கரையினிலே..’ வெர்ஷன் ஒரு அற்புதம். கேட்கும் தோறும் மனம் கரையச் செய்யும் ஒரு இசை உன்னதம்.