
அங்கிதா ஜோஷியும் நிராலி கார்த்திக்கும் பாடியுள்ள இப்பாடல் மேக்மல்ஹார் ராகத்தில் அமைந்துள்ளது. மேக் மல்ஹார் மழைக்கான ராகம்.
இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் வாத்தியம் ஜோடியா பவா என்றழைக்கப்படுகிறது. கட்ச் பகுதியின் வாத்தியம் இது. வாசிப்பவர் நூர் மொஹம்மெத் சோதா.
தீஜ் எனப்படும் பண்டிகையின் போது பாடப்படும் பாடல் இது.
Boondan Boondan Barse Meha, Kajrari Kaari Badariya, Aise Naache Mora Manva, Jaise Banme Mor Papiha Bheege Na More Pi Ki Patiya, Ho Jisme Aavan Ki Batiya, Baawri Tu Aur Tera Andesa, Saawan Piya Aavan ka Sandesa, Chal Daale Jhule Bagho Mein, Phir Mehke Mehndi Hatho Mein, Sa Sa...Sa Re Ni Sa ni dha Ni Sa ni Pa ga Ma Re Sa Ni Sa Boondan Boondan துளித் துளியாய் மேகம் பொழிகிறது மையிட்டுக் கொண்ட மேகங்கள் என் மனம் ஆடுகிறது வனத்தில் ஆடும் மயில்களைப் போல 'என் காதலனின் கடிதங்கள் ஈரமாகி விடுமோ அவன் வரும் சேதி அதில் இருக்குமோ' 'பிச்சியே நீயும் உன் சந்தேகமும் மழையே அவன் வருவதற்கான தூது தான்' 'வா, தோட்டத்தில் ஊஞ்சல் கட்டலாம் பிறகு மணக்கும் மருதாணியை கையில் இடலாம்' (துளித் துளியாய்)