அழகி

நாளை அவளும் வருவாளோ

இனிய புன்னகை ஒன்றை
சதா
சூடியிருப்பாள்

அழகி

சந்தித்தால் கண்கள்
மின்னும்
முகம் ஒளி கொள்ளும்

வேண்டாம்
வந்து விடாதே

எனக்குக் குமட்டுகிறது

உன் கண்ணும்.. உன் உதடும்..

உன்னை..உன்னை..

தொண்டை அடைக்க
கண்ணீர் முட்டியது